logo

இந்தியன் செஞ்சிலுவை சங்கம் ஸ்ரீரங்கம் கிளை மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

https://youtu.be/XkFH0fe3daA?si=OXmBpw0P2GPC5THu
திருச்சி
மார்ச் 19
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகரில் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஸ்ரீரங்கம் கிளை மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் தொடங்கிய இப்பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இந்த பேரணியானது அம்மா மண்டபம் தொடங்கி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.
இந்த பேரணியில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். இந்த பேரணியில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சிவக்குமார்
ஸ்ரீரங்கம் நகராட்சி இணை ஆணையர் திவ்யபாரதி
ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் முனைவர் மோகன்ராம் செயலாளர் மிலிட்டரி நடராஜன் சமூக ஆர்வலர் ஐய்யாரப்பன் இந்திய செஞ்சிலுவை சங்கம் திருச்சி மாவட்ட தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் காவல்துறை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பதாபையில் அனைவரும் கையெழுத்திட்டு வாக்களிப்பதன் முக்வியத்துவத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்தனர்

7
1410 views